Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுக்கோட்டை : மகளிர் திட்டம் சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு, கோலங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நூறு சதவிகிதம் வாக்குப்பதிவை முன்னிலைப்படுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை போஸ் நகர் 31 வது வார்டு பகுதியில் உள்ள சுய உதவி மகளிர் கூட்டமைப்பான ஜான்சிராணி கூட்டமைப்பு வேலுநாச்சியார் கூட்டமைப்பு சந்தியா கூட்டமைப்பு சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் வரையப்பட்டு மக்கள் பார்வைக்கு முன் வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை மகளிர் திட்ட உதவி அலுவலர் மூர்த்தி துவக்கி வைத்தார்.தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட கோலங்களை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.இதில் சமுதாய அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.